×

அய்யலூரில் சாலையில் கிடக்கும் மரக்கழிவால் சறுக்கி விழும் வாகனஓட்டிகள்: அகற்ற கோரிக்கை

 

வேடசந்தூர், மே 3: அய்யலூரில் சாலையில் கிடக்கும் மரக்கழிவுகளால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அவற்றை அகற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அய்யலூரில் இருந்து புத்தூர் செல்லும் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலையோர மரங்களை வெட்டி உள்ளனர். மேலும், மரத்தில் இருந்த பட்டைகளை உரித்து வளைவான சாலையின் நடுவே போட்டு சென்றுள்ளனர்.

இதனால் சாலை வளைவில் திரும்பும் வாகனஓட்டிகள் மரப்பட்டைகளால் தடுமாறி அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘சாலையின் நடுவே கிடக்கும் மரக்கழிவுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் நடுவே உள்ள மரக்கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post அய்யலூரில் சாலையில் கிடக்கும் மரக்கழிவால் சறுக்கி விழும் வாகனஓட்டிகள்: அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ayyalur ,Vedasandur ,Puttur ,Dinakaran ,
× RELATED அய்யலூர் பேரூராட்சியில்...